பல்லுயிர் கலந்த
மனித இனமே..
என் இனம் ஏன்
இவ்வண்ணமென
எண்ணும் மனமில்லாத
பெண்ணினம் நான்
தூங்கிய நொடிகளில்
ஏங்கிய நொடிகளே அதிகம்..
செல்லுமிடம் தூரம்தான்
சென்றுவிட்டேன்
போகும் இடமும்
இனி தூரம்தான்
போராடும் மனம்
சளைக்கவில்லை...
மடை திறந்ததும்
நடையை அடைக்கும்
தடைக் கற்களை
உடைத்துச் செல்லும்
காட்டாற்று வெள்ளம்..
ஒடுக்கப்பட்டது
தடுக்கப்பட்டதென
ஒதுக்கபட்ட எம்மை
அவனால் படைக்கப்பட்டதென
அணைத்த அன்பிதயங்களே
கோடி வணக்கங்கள்..
நல்லதோர் வீணையாய்
இன்னலை துடைத்த
இன்னிசையாகும்
உறுதியுடனே..
நாற்கால் இருக்கையில்
நானிருப்பேன்...
நளினம் கற்ற பெண்இனமே
நீ நதிபோல ஓடிக்கொண்டிரு
நாளைய வரலாறு
நம் பெயரும் சொல்லுமென
நம்பிக்கையோடு...🙏
*** ***
(ஜவ்வாது மலையில்.. அரிய ஜவ்வாது மணமாய் வீசும் 23வயது பெண் நீதிபதிக்கு சமர்ப்பணம் இக்கவிதை..🙏)