Sunday, 26 November 2023

சிந்தனைக் கேணி..



பார் போற்றும் 

பகுத்தறிவு ஞானி

பாவங்களின் சிரமகற்றிய

சிந்தனைக் கேணி

அறிவினம் காத்த அச்சாணி...


பெண்ணடிமை

மடமை களுடைத்து

இனப்பிரிவு இழிவால்

பாதகப் பழியால்

பள்ளத்தில் விழுந்த

உள்ளத்தை உரமாக்கி

வெற்றி வேர்வையால்

சுதந்திர சுவாசமளித்த

வெண்தாடி வேந்தன்...


மூச்சுள்ளவரை பேச்சால் 

வசை பாடியவன்

போர்க்குண மனதை

பட்டைத் தீட்டியவன்

பழமை வாதிளை 

முரட்டிப் புரட்டிய

ஈரோட்டுக் கிழவன்..


மதமெனும் மனம் கவ்வாத

இம்மண்ணின் கவசம் யார் 

ஏற்றத் தாழ்வை ஏறிமிதித்த

கலியுகக் காவலன் யார்

எவராயினும் எதுவாயினும்

பகுத்தாய்ந்து பல்லுயிர் ஓம்பிய

அறிவுச் சமூகத்தின்

ஆற்றல் யாரென

தரணி வியந்த பதிலாய் 

உய்த்தவன் உரிமையுள்ளவன்

தமிழினம் மறவா

தந்தை பெரியார்...


கடவுளில்லை யெனும் 

போதனை எமக்கில்லை

என் தாய்மொழியை செதுக்கியவன் இவனென

மாடசாமி.. மயில்சாமிகளும்

வணங்கிய *ஈவெராமசாமி*

வாழ்த்துவோம் இந்நாளில்

ஒற்றுமையாய் ...🙏

*** *** **

Friday, 24 November 2023

தூர்வார.. போர் தொடுங்கள்..


மலரினும் மென்மை
மெல்லினத் தேவதைகள்
வல்லூறுகளின்
வல்லுறவுகளால்
சிதறும் காகிதங்களாய்
மாறும் அவலங்கள்
வேரறுக்க... தூர்வார 
போர் தொடுக்க
கை கோருங்கள்..

கடவுளாய் சுமக்கும் 
தங்கத் தேர்களின்
களங்கச் சக்கரங்களை 
கழற்றி எரியுங்கள் 
அன்பான ஆணினமே...

இரண்டு கைகள்
இணைந்த உறுதி
எழுப்பும் ஓசையே
இவ்வுலகம் உந்தும் 
விசையாகும்...

புன்னகைப் பூக்களால்
இன்பமி ரட்டிப்பாக
துன்பத்தை துவைக்கவே
ஓடுகிறோம் நாங்கள் 
அழகு நதிகளாய்...

ஆர்ப்பரிக்கும்
கடல் சுனாமியாக..
பேய்.. பிசாசுகளாக
பூலோக காளியாக..
மாறும் நிலைக்கு 
தள்ளி விடாதே 
அதிகார  வர்க்கமே
இருகரம் கூப்பி
வணங்குகிறோம்
நாங்கள்...
* * *

அனைத்துலக
பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாள்.. இன்று

இதுபோன்ற நாள் இனி தேவையில்லையென ஆதரவுக்கரம் நீட்டி.. சிந்தித்து செயல்படுவோம்


Saturday, 18 November 2023

ஆ......ண்(டவன்) கள் தினம்

 


அவன் இவனென
அன்புடன்
ஆதிக்காலம் முதல்
ஆயுட்காலம் வரை
அனைவரும்
உச்சரிக்குமோர் மந்திரம்
ஆண் எனும்
கனவுலக தந்திரன்
ஆம்...‌ இவன்
ஆழ்மனமுள்ள எந்திரன்...

ஆ.............ண் 
நெடில் என்பதால்தான்
அவன் நெஞ்சுரம்
நிறைந்தவன் ஆகிறானோ...!

உள்ளக் குமுறலை
ஊர் அறியாமல்
உள்ளுக்குள் அழுகிறானோ..!

ஆண்(பால்) தரும் மயக்கம்
பல போதைக்கும் 
அடிமையாகிறானோ.!

பெருமையாக
எல்லோர் சுமையும்
முரண்பாடுள்ள
பெயர்களையும்
சுகமாக சுமக்கிறான்..

பல நேரம்
பெற்றதுக்கும்
பெற்றவருக்கும்
தாயாகிறான்...

மெழுகுச் சிலையாய்
ஒளிரும் பெண்ணுக்குள்
எரியும் திரியாகிறான்...

முடியும் வரை
முடியாது எனும்
வார்த்தையை
முறியடிக்கவே
முடிவு காலம்வரை
போராடுகிறான்...

படைப்பாற்றல்
உள்ளதால்தான்
முதல் ஈரெழுத்தை 
சேர்த்துக் கொண்டானோ..?
நமை படைத்த
ஆண்........டவன்..