பார் போற்றும்
பகுத்தறிவு ஞானி
பாவங்களின் சிரமகற்றிய
சிந்தனைக் கேணி
அறிவினம் காத்த அச்சாணி...
பெண்ணடிமை
மடமை களுடைத்து
இனப்பிரிவு இழிவால்
பாதகப் பழியால்
பள்ளத்தில் விழுந்த
உள்ளத்தை உரமாக்கி
வெற்றி வேர்வையால்
சுதந்திர சுவாசமளித்த
வெண்தாடி வேந்தன்...
மூச்சுள்ளவரை பேச்சால்
வசை பாடியவன்
போர்க்குண மனதை
பட்டைத் தீட்டியவன்
பழமை வாதிளை
முரட்டிப் புரட்டிய
ஈரோட்டுக் கிழவன்..
மதமெனும் மனம் கவ்வாத
இம்மண்ணின் கவசம் யார்
ஏற்றத் தாழ்வை ஏறிமிதித்த
கலியுகக் காவலன் யார்
எவராயினும் எதுவாயினும்
பகுத்தாய்ந்து பல்லுயிர் ஓம்பிய
அறிவுச் சமூகத்தின்
ஆற்றல் யாரென
தரணி வியந்த பதிலாய்
உய்த்தவன் உரிமையுள்ளவன்
தமிழினம் மறவா
தந்தை பெரியார்...
கடவுளில்லை யெனும்
போதனை எமக்கில்லை
என் தாய்மொழியை செதுக்கியவன் இவனென
மாடசாமி.. மயில்சாமிகளும்
வணங்கிய *ஈவெராமசாமி*
வாழ்த்துவோம் இந்நாளில்
ஒற்றுமையாய் ...🙏
*** *** **