Monday, 31 July 2023

6 மனமே 6 /7 தசாப்தங்கள் வாழ்வா... அல்லது 8 எட்டுக்குள்ள வாழ்வா... எது சரி..?

கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் மூலம் 

6 கட்டளை / கொள்கைகளை கடைபிடிக்கச் சொல்லி ஆறு மனமே ஆறு என்றார்..


வைரமுத்து அவர்கள் தன் பாடல் மூலம் 

நமது வாழ்க்கையை 8 எட்டாக பிரித்து முன்னேற்றம் காணவும்,  64க்குப் (எட்டாவது 8) பிறகு இருந்தால் நிம்மதி இல்லை என்கிறார்..


சரியாகப் படுகிறது என்றாலும்கூட..  நமது சிந்தனையில் இக்காலச் சூழலில் சிந்தித்தோமெனில்...


வாழ்க்கையை

10 பத்தாக இல்லை இல்லை 7 பத்தாக பிரித்தால் சரியாக வருமென பார்க்கலாம்..


(7 என்னும் எண் எல்லா காலத்திலும் சிறப்புள்ளதால் ..)


முதலாம் 10-  சிறுவர்  பருவம்


2ம் பத்து  - கல்வி / விளையாட்டு 


3ம் பத்து - திருமணம் சந்தோசம்/சந்ததி பெறுதல்


4ம் பத்து- பிள்ளை வளர்ப்பு / சொத்து சேர்த்தல்


5ம் பத்து - சொத்தை பாதுகாத்தல் / கடமைகள் முடித்தல்


6ம் பத்து - ஆன்மீகம் /ஊர் சுற்றுதல் / மற்றவர்களுக்கு உதவுதல்


7ம் பத்து - அனுபவம் பகிர்தல்/ அமைதி வழி இருத்தல் கடைசி நொடிகளை நோக்கி...

Sunday, 30 July 2023

உழவனை தொழுவோம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகரம் விட்டு

விவசாய நிலம் நோக்கி குடும்பத்தை கொண்டுசெல்வேன்..

அந்த வயல்களில் பயிர்களிடம் சிறிதுநேரம் கொஞ்சிக்குலவி வரும்நேரம்..  அவ்விவசாயி கைகளில் காய்கறிகள் வாங்கியபின் பணம் தரும் நேரம் அவர்கள் முகங்களில் ஏற்படும் சிரிப்பும் புன்னகையும் அவ்வளவு ஆனந்தம் தரும்..


சில வாரங்கள் கால சூழ்நிலையால் போகமுடிவதில்லை..

ஆனால் இன்று மீண்டும் போகிறேன்.. 

நண்பன் செந்திலுக்கு நன்றி..

குறிப்பு: டெல்லியின் அருகில் உள்ள உ.பிரதேசம், ஹரியானா மாநில விவசாயிகள் தமிழனைக் கண்டால் மிகமிக அன்பாய் வரவேற்பார்கள்.. மதிப்பார்கள்.. ஏனெனில் உழவனை நாம்தான் உயிராய் மதிக்கிறோமாம்..





இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

 


மிகவும் முயற்சிக்குபின்

தோல்வியுற்றதால்

இடிந்து போன நேரம்..


மனைவிசொல்

அதை மறந்துவிடுங்கள்


பெற்றோர்சொல்

பரவாயில்லை

விட்டுத்தள்ளு


பிள்ளைகள்சொல்

அடுத்தமுறை

வெற்றியாகும்


உற்றார் சொல்

இவனால் முடியாது


யார் சொன்னதும்

கேட்காமல்

வாசலை காண்கையில்

இருகரம் ஆரத்தழுவியது

நான் இருக்கேண்டா..


ஆருயிர் உறவான

நண்பனின் கைகளே 

கண்கள்...கலங்கியது

நம்பிக்கையில்

மனம் உறுதியானதால்..

* * *

🧑‍🤝‍👨அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..🧑‍🤝‍👨

Saturday, 22 July 2023

உலக பெற்றோர் தினம்

தங்கம். வீகோசீ (Thangam VEEGOSEE)

💐அற்றவரோ..
துற்றவரோ..
கோவணம் 
தற்றவரோ...

செற்றவரோ..
உற்றவரோ..
எதற்கும் ஏற்றவரோ..

கற்றவராயினும்
பற்றவராயினும் 
நாலும் அறிந்த
நற்றவராயினும்...

வேற்றுலகம் மாறாது
வெற்றிப் படியேற்றி
வெற்றிடம் நிரப்பும் 
பெற்றவரைப்
போற்றுவோரே..
குற்ற மற்றவர் 
குறை கூறும் 
உலகைக் 
    கொற்றவர்...💐💐
* *


குறிப்பு:
அற்றவர்-ஆசையற்றவர்
துற்றவர் -பிச்சைக்காரர்
தற்றவர் -  உடுத்தியவர்
செற்றவர் - சினந்தவர்
உற்றவர்-தகுந்தவர்
நற்றவர்-நன்னெறி அறிந்தவர் 
பற்றவர் - அன்பு/பண்புடையவர்
கொற்றவர் - வெற்றி பெறுபவர்.

Saturday, 15 July 2023

எகபசெகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

 💐பசுமை நிறைந்த

நினைவுகளை 

பழகிக் கழித்த நாள்களை

மீண்டும் பாடிக்கழிக்க

திரும்பிய பறவைகளே…


பாசப்பரிசுகளை(பிணைப்புகளை)

பள்ளத்தில் தள்ளாது

இதய இல்லத்தில் தைத்து

இன்றதை திறந்து 

இன்ப வெள்ளத்தில்

உவக்க வந்த நவ்லுள்ளங்களே...

வருக.. வருகவென

வரவேற்கிறது 

அபதொநுக (ஜிபிடி)

சரணாலயம்...

வவாச மாக இருந்த முமாச 💐💐💐

* * *

இவ்விழாவிற்கு உழைத்த

எல்லா...

கொசக்கி பசப்புக்களுக்கு...


(மன்னிக்கவும்)


எகபசெகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


(*எகபசெகிகள் -  என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்த கர்மவீரர்கள்

வவாச - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

முமாச- முன்னாள் மாணவர்கள் சங்கம்)

Sunday, 9 July 2023

உங்களுக்கு தெரிந்த/ மறந்த வியப்பூட்டும் உண்மைத் தகவல்கள்.‌‌..

உங்களுக்கு தெரிந்த/ மறந்த வியப்பூட்டும் உண்மைத் தகவல்கள்.‌‌..

தமிழுக்கு'அமுதென்று' பேருண்டு

'கதி' என்ற பேருமுண்டு அறிவீரோ....

கம்பராமாயணம்+திருக்குறள் தான் அது.

திருக்குறள் பொய்யாமொழி மட்டுமன்று அதில் வியக்கும் அம்சங்கள் சில:

மொத்த குறள்கள் 1330= 1+3+3+0= 7

அதிகாரம் 133=1+3+3= 7

முப்பால் =38+70+25=7

வார்த்தைகள் மொத்தம் (இரண்டடியில்) = 7

ஏழு என்ற வார்த்தை வரும் குறள் = 7

(கு எண் - 62, 107, 126, 398,   538, 1269 & 1278)

அட.. இதன் கூட்டுத்தொகை கூட =62+107+126+398+538, 1269+1278 =7

சித்தருக்கு சித்தர் , முனிவருக்கு முனிவர்

திருவள்ளுவர் என்னும் கடவுள் அவதாரம் உலகத்தில் உள்ள மனிதர்கள் எவ்வாறு நெறிபடுத்தி/ நேர்படுத்தி வாழும் முறையை திருக்குறளில் எழுதி வைத்து சென்றுள்ளார்.

மேலும் சில தகவல்கள்

2 குறள் ஒரே மாதிரியிருக்கும்  பொருள் மட்டும் சற்று மாறுபடும் (கு.எண் 355 & 423 , 241&411)

2 அதிகாரங்கள் ஒரே பெயருள்ள தலைப்பு வருகிறது (அதி:   -71&128)

2 குறள்களில் பறை என்னும் வார்த்தை வருகிறது (கு 1115 & 1180)

3 பெயர்கள் 

பேரறிவாளன் (215)

அன்பறிவு (513)

வள்ளி (1304) மட்டும் உபயோகபடுத்தப்பட்டுள்ளது ஆனால் பொருள் மட்டும் சற்று மாறும்...

தமிழ்... முருகன்... என்னும் பெயர்கள் எக்குறளிலும்  குறிப்பிடப்படவில்லை

கு.560-  6 வகையான தொழில்கள்  பற்றி குறிப்புள்ளது‌.

கு. 210 - இந்தக் குறளின் பொருளில்  மட்டும் சற்று முரண்பாடுள்ளது

ஏற்புடையதாக படவில்லை என் அறிவுக்கு (நீங்களும் சிந்திக்கவும்)

4 விலங்குகள் நடப்பன -  நரி, மாடு, யானை, புலி

4 ஊர்வன -  ஆமை, முதலை, பாம்பு, மீன்

4 பறப்பன- மயில்,கொக்கு, காக்கை, ஆந்தை

4 தாவரங்கள் - தாமரை, அணிச்சம், வள்ளி, நெருஞ்சி  பற்றிய குறிப்புள்ளது

* * **"




7 என்ற எண்ணுக்கு மட்டும் அவ்வளவு ஏன் சிறப்பு...

7 பிறவிகள்
1)தேவர், 2)மனிதர், 3)விலங்கு, 4)பறவை, 5)ஊர்வன, 6)நீர்வாழ்வன, 7)தாவரம்

7 நரகங்கள்
1) கூடசாலம், 2) கும்பிபாகம், 3) அள்ளல், 4) அதோகதி, 5) ஆர்வம், 6) பூதி, 7) செந்து. (பிங்.)

7 சுவரங்கள் (ஸ்வரங்கள்)
1. ஷட்ஜம்(ஸ ச)
2.ரிஷபம்(ரி)
3. காந்தாரம்(க)
4. மத்திமம்(ம)
5. பஞ்சமம்(ப)
6. தைவதம்(த)
7. நிஷாதம்(நி)

7 ரிஷிகள்
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியப

7 மேலுலகம்
7. சத்யலோகம்
6. தபோலோகம்
5. ஜனோலோகம்
4. மஹர்லோகம்
3. சுவர்லோகம்
2. புவர்லோகம்
1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகம்

7 கீழுலகம்
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்

7 வள்ளல்கள்..(கடையேழு வள்ளல்கள்)

மேலும் சில...7...7...

இதெல்லாம் அக்காலத்தில்

இக்காலத்தில்...
7 உலக அதிசயங்கள்
7 மாநில சகோதரிகள்
7 வண்ணங்கள்
7 நாட்கள்

என சிறப்புகள் ஏராளம் உள்ளதால்..
விரும்பினாரா அல்லது 
அவர் பெயரிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையும் 
தி+ரு+வ+ள்+ளு+வ+ர்=7
என்பதாலா...

(குறிப்பு: தமிழ் அறிஞர்கள்/தமிழ்கூறும் நல்லுலகம் பிழையிருப்பின் மன்னிக்கவும் ...)
**. **
தங்கம். வீகோசீ (Thangam VEEGOSEE)


Saturday, 8 July 2023

சிறுவர்கள்/பெரியவர்கள் Tongue twister- மெருகேற்ற, பக்தி ஞானம் பெற...

தமிழகத்தில் திருவண்ணாமலையில் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதர் சுவாமிகள் அப்பன் முருகனின் அருள் கிடைக்க பாடிய திருப்புகழ் என்னும் தேன்தமிழ் நூலை ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் பாதுகாத்து வைக்கவேண்டும்...


பாடல் எண் -5, ,59 & 134

படித்தும் பாடியும் பாருங்கள்... வாயும் மணக்கும், நாவும் சிறக்கும்.


Bad salad: Sad  ballad

Belly jeans  : Jelly beans


தமிழ் உதாரணம்: 

உளறக் கிழங்கு - உருளைக்கிழங்கு...

மருத - மதுர… 

குருத - குதிர

கவிஜ - கவித… 

ஒரு இரண்டரை வயதுக் குழந்தை முதன் முதலாக தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட திருக்குறளை மழலை மற்றும் நா வளர்ச்சியின்மை காரணமாக இப்படிக் கூறியது:

‘குதிர முதல எருதெல்லாம் ஆதி

பக்கத்ல முதல்லே உளுது’

இதில் அது சொன்னது பாதியென்றால், .வார்த்தை விளையாட்டுக்காக அதை இட்டுக் கட்டி எழுதப்படும் மீதியும் ஒரு வகை ஸ்பூனரிசம்! (Spoonerism ) (தமிழில் சகாரம்)