Sunday, 15 October 2023

3 எழுத்தில் மூச்சுண்டு.. மும்மத கடவுளுமுண்டு..

 

எம்மதத்தில்

எவ்வினத்தில் பிறந்தாய் 

என்பதல்ல  பெருமை

எத்தனை காலம் 

எத்தனை பேர் 

மனதில் வாழ்ந்தாய்

என்பதே பெருமை...


மூன்றெழுத்தில்

மூச்சுண்டு

மும்மத கடவுளுமுண்டு

மனிதமுண்டு மாண்புமுண்டு..


பிறர்நலமே தன்னலமென 

வாழ்ந்த மனிதன் 

இம்மண்ணில் இன்னும் 

இருந்திருக்கலாம்

நனவான கனவுகள்

செழித்தபின் 

மறைந்திருக்கலாம் 

என்று நினைக்கலாம்

எனில்..

மாணவ மனங்களில்

எக்காலமும் மணக்கும் 

அப்துல் கலாம்

பெயரொன்றே உச்சரிக்கலாம்...


"நமக்கும் ஓர்பக்கம்

வரலாற்றில் இருக்கட்டும்

வனம்வளர  இனம் வளரும்

சிறுவுயிரும் உறவாகுமென"

அவர் பதிவை

பசுமரத் தாணியாய்

மனதின் கனவுகள்

மண்ணின் விதைகளாகட்டும்..

* *

அவுல்பகிர் ஜைனுல்லாப்தின் அப்துல் கலாம்

APJ Abdul Kalam.

Missile Man of India

பிறந்த நாள் இன்று அவரை நினைவுகூர்வோம்.

.🙏

Sunday, 1 October 2023

ஆயுளுள்ளவரை ஆட்டுவித்தவன்...

 



வெள்ளையனை எதிர்த்த வீராதிவீரன்..

வீரபாண்டிய கட்டபொம்மன்


ஆதிதேவன் அவதாரம்

பரமசிவன் ..

ஆன்மீகம் பழுத்த அப்பர்

சுதந்திர போராட்டத்

தியாகி வ.உ.சி 

பாட்டுத் தலைவன் பாரதியென 

மண்ணின் வரலாற்றை

இனத்தின் பண்பாட்டை 

கண்டிராத இளைய தலைமுறைக்கு

காண்பித்து.. கற்பித்தவன்...


அண்ணனா... நண்பனா

கண்ணனா.. கணவனா..

ஏமாளியா.. கோமாளியா..

கள்வனா.. காதலனா..

இருப்பதும் ஓர்நிலையே 

அதுபோல் வாழ்வதும் ஓர்கலையேயென

உறவுகளின் உன்னதத்தை

உணர்த்தியவன்

நான் அசைந்தால அசையும்

அகிலமிங்கேயென 

அனைவரையும்

ஆயுளுள்ளவரை  ஆட்டுவித்தவன்...


கொழுத்த செல்வந்தன்

பரம சாது ஏழை

ஊனமுற்ற ஊமையென

குரலால்.. பாவனையால் 

நடிப்பின் நூலகமானவன்

அவன் வாயுச்சரித்த வசனவரிகள் 

தமிழினம் மறவா முகவரி...


நம்முள்ளம் கவர்ந்த

உலகம் வியந்த

சூரக்கோட்டை தந்த தமிழன்

சிவாஜி கணேசன் என்னும்

சிம்மக் குரலோன்...

பேரைச் சொன்னாலே

ச்சும்மா... அதிரும்

அகில உலகமும்..🙏

 * * 

முதியோரெனும் ஆணிவேர்

 




ஆணிவேர் ஆழமானதால்

ஆலமரம்கூட

ஆண்டாண்டு காலம்

அழியாது நிற்கிறது

மனித இனம் தாங்குவது

மூதோர் எனும் வேர்களே...

 

அவ்வப்போது

ஆசிரியரைக் கண்டால்..

நமை அறியாமல்

பாதம் பணிவோம்


ஏனோ..  மனம் 

ஏற்றிவைத்த ஏணியை

நமை ஈன்றவர்

நம் முதியோரை

வணங்க வருவதில்லை..


எல்லா வாய்களும் ஓர்நாள்

பொக்கை வாய்களாகும் 

அதில்வரும் சிரிப்பும் அழகே..

அவ்வழகை தரும் ஆனந்தம்

நாமும் தரமறவோம்..🙏

* * *

தங்கம். வீகோசீ

புதுதில்லி


சி.கு: என்றாவது தாய்தந்தை அல்லது தாத்தா பாட்டியின் அருகே அமர்ந்து கைவிரல் அல்லது கால்விரலின் அழுக்ககற்றி நகம் வெட்டி இருக்கிறீர்களா..

நான் செய்திருக்கிறேன் 

என் பாட்டிக்கு. . தவறாக சிறிது இரத்தம் வந்த வலியின் வேதனைகூட தெறியாமல் அவ்வளவு ஆனந்தமாக சிரித்தது😀