புற்றீசலாய் வளருமோ
புயலாய் பரவுமோ
புற்றுநோயெ ன தவிக்கும்
மனம் வேண்டாமே
மனித இனமே...
புகைப்பதும்
மதுவை சுவைப்பதும்
அன்றோர்நாள் ஆனந்தமே...
அதனால் வருவதும்
ஆட்கொள்வதும்
ஆயுளுள்ளவரை
அலைக்கழித்து..
உலைவைத்து
அடங்க வைக்குமே...
கற்கத் துடித்த
கவ்விப் பிடித்த
கேடுகள் யாவும்
நொடியில் நடக்கும்
மனச் சிதறலே..
விருட்சமாகி வளர்ந்தால்
விடாது துரத்தும்
நாடிகள் நொடியும்வரை...
பிடிகள் இறுகுவதற்குள்
விழித்துக்கொள்
தூய வாழ்விழந்து
மாய வலைக்குள்
மறைந்து விடாதே...
கேன்சர் எனும்
கேங்ஸ்டர்கள்
சூழ்வதற்குள்
மான்ஸ்டர்களாக
மாறிவிடு மானிடா...
***** ** *****
No comments:
Post a Comment