Sunday, 27 August 2023

அன்னை தெரசா என்னும் அன்பு தெய்வம்...

 

அன்பு என்னும்

மூன்றெழுத்தே

உயிர்களை உயர்வாக்கும் 

மந்திரமென உலகிற்கு

உரக்கச் சொன்னவள்


அயல் தேசத்து

கன்னியிவள்

நம்தேசத்தில்

கன்னியாஸ்திரியாக

வாழ்ந்தவள்..


பாரத தேசத்தின்

நோயாளிகள்

அனாதைகளென

ஒதுங்கியவர்களை

ஆதரவுக்கரம் நீட்டி

அரவணைக்க

மீட்டெடுக்க

தம் வாழ்வை

அர்ப்பணித்தவள்

நம் மண்ணிற்குள்

உரமானவள்..


அன்பு உள்ளத்தால்

அன்னையென

வணங்கப்பட்டவள்

உலகெலாம் 

உயரிய பலவிருதால்

அலங்கரிக்கப்பட்டவள்..

இன்று இவள்

பிறந்த நாளில்

பெண்ணினத்தை

மதிக்கும் 

சமஉரிமை நாளும் 

கொண்டாடும் 

பெருமை கொள்கிறது

இவ்வுலகெங்கும்...


நாமும் அவளை

நம்மின.. மகானாய்

நினைவில் வைத்து

அவள் வாழ்வின்

படிப்பினை எடுத்து

அன்புக்கரம் கோர்த்து

மதம் மறந்து

வணங்குவோம்

மதர் தெரேசாவை...🙏

* *

Saturday, 19 August 2023

அப்பாடி.. ஆடி ..

வாய் பிளந்தால் ஆத்தாடி...

காற்றில் பறந்தால் காத்தாடி...

கூழ் ஊற்றினால் அம்மன்ஆடி

அவளை வணங்கும்

பாடல்தேடி ஆடிப்பாடி

கூடி ஆடினால் கூத்தாடி..


தள்ளுபடியில் மனம் அள்ள

வைத்தது ஓடியோடி...

புதுமணத் தம்பதியை

தள்ளிவைக்கும் தலையாடி ...

எம்மாடி.. இதெல்லாம் ஏனிப்படியென

காணும் நம் முகம்வாடி

சுத்த வைக்குது தலையாடி...


அனைத்தும் இனிதே முடிந்தது 

இம்மாதம் ஆடி...🪷🪷

*** *** 

உலக மனிதநேய தினம்


நேயம் இல்லாத

மனிதம் உண்டா..?


மனிதா..

எது இல்லையோ

எது தேவையோ

அதைத்..தா  

அல்லது

தருவித்து தா...


அளவில்லாத செல்வம்

அளந்து தராவிடினும்

அன்பெனும் ஆடையை

நேசக் கரங்களால் தை..

கூடிவாழும் முறை 

உண்டென்பதை

மனதில் விதை...


நீ 

மனிதனா..மாமனிதனா

மன்னனா..மாமன்னனா..?

உன் விழி மூடுகையில்

வழியைக் காணாத

வலியால் துடிக்கும்

விழிகளே சொல்லட்டும்..


இவரைப்போல

மண்ணாசை 

மனயாசையில்லா

மனிதநேயன்

மீண்டும் பிறக்கட்டும்...


கண்ணனோ.. கள்வனோ 

அல்ல கேள்வி

கருணை யுள்ளவனா

எனக் கேள்..

உனதருகே வாழும்

உயிர்களுக்கும்

மண்ணுக்கும்

எதைத் தருகிறாய்

என்பதைக் கேள்...


இன்று மனிதநேயம்

கொண்டாடும் நாள்

அதற்கு தகுதியுள்ளவனா 

உனக்குள் கேள்...

*** ***

Tuesday, 15 August 2023

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (Happy Independence Day)

 

மாநிலம் பல

ஒன்றடங்கியது 

எங்கள் தேசம் 

இனங்கள் பல

ஒன்றிணைந்தது

எங்கள் நேசம்

இன்னலும் வலியும்

மரணம் கடந்தே பெற்ற

இச்சுதந்திர சுவாசம்

தந்த தியாகிகளே

நமது தலைக்கவசம்...


இன்றெமது கைகளில்

தவழ்வது ஓர்கொடி

தாயின் மணிக்கொடி

என்னும் தேசியக்கொடி...


எம் மதமாயினும் 

எம் மொழியாயினும்

இந்திய னென்னும்

பெயரே பெருமை..

நம் பேச்சும்..மூச்சும்..

சொல்லட்டும் அதனருமை

அதுவே யிருக்கட்டும்

தலையாய உரிமை

முடியும்வரை 

நாட்டைக் காப்பதும்

கடமையென

உயிரான தாய்மொழியில்

உள்ளத்திலெடுப்போம் உறுமொழி...


ஊருமுறவும் துறந்து

எங்கோர்.. மூலையில் 

எதையும் ஏங்காமல்

தாய்நாடே தன்னுயிராய்

காக்கும் காவலனை

வாழும் தியாகியை

வணங்குவோம்

குல தெய்வமாய்

தவிக்கும் அவனுறவை

நினைப்போம் நமதாய்..🙏

* * **

Wednesday, 9 August 2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)


பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)

குன்று தோறும் நின்றாடி

குலம் காத்த ஆறுமுகக்குமரா..

உன்றன்  அருளாசியோடு

இன்றுதித்த என்றன் குமரனை...

 

திருக்குறள் திருப்புகழ் திருமுறை

தேவாரம் திருவாசகம் தேன்தமிழ்

நூல்யாவும் என்றும் மறவாது ஓதி...

கற்றவர் போற்றிட மற்றவர் கற்றிட

செல்லுமிடம் யாவும்

நின்று முயன்று வென்றிட..

 

தமிழனாய் பிறப்பதற்கோர்

தவமிருத்தல் வேண்டுமென

இறைவன் பாதம்பணிந்து

வேர்மறவா தளிராய்.. தாய்மொழி போல்

சிறப்புற்று வாழ்ந்திட

காத்தருள்வாயென வேண்டுகிறோம்...

 

எந்நாளும் போலவே... இந்நாளும் இல்லையென

நமக்கடுத்த தலைமுறை.. தழைத்து விட்டதென

சற்றே.. ஆனந்தமாகிறது தாய்தந்தை மனமின்று,..

Friday, 4 August 2023

ஏழைகளின் ஆப்பிள்..💐

Happy Bloggers Day

ஏழைகளின் ஆப்பிளாக

பூத்துக் குலுங்கி

ரசித்து.. ருசித்த

தக்காளி.. இன்று 

தங்கம் நிகராக..

அடுத்தது

ஆகாச விலையில்

அரிசியும்தான்...

 

அன்னமிட்ட  கைகளில் 

கிண்ணம் திணித்து

பச்சைக் காடழித்து 

பிச்சைப்பணம் வளர்த்த

வானுயர வீடுகளானால்..

அலங்கார அடுப்பில் 

பூனை படுத்துறங்கும்

நம் பிள்ளை 

வயிறு சுருங்கும்...


இன்றைய 
அவலநிலையை தோலுரித்து

தொப்பையை தொங்கவிட்டு

நிமிர்ந்த தலைகளை

நாக்கடிமையால் குனியச்செய்த 

நகர வாசிகளே...

 

 வரகும்.. கேழ்வரகும்

தினையும்.. பனையும்..  

எள்ளுருண்டை கடித்தவர் 

இடித் துரைக்கவும் 

இன்னுமது அழியவில்லை 

இதை யுண்டவர் 

நோயண்டி வீழ்வதில்லை... 


வாழும் கலையும்

வழித்து உண்ட 

வாழை இலையும் மறவாதே.. 

உழவன் ஒதுங்கினால்

உலக வாழ்வு சிறக்காதே...


தரணி போற்றும்

இனிய இனமே..

இனியாவது விழித்திடு

வளமான சமூகம்

நிலைத்திட..செழித்திட ..

வழியுண் டெனத்தேடு

தமிழன் என்றோர்  

இனத்திற்கேது யீடென
எழுதட்டும் ஏடு...

* * *💐