அன்பு என்னும்
மூன்றெழுத்தே
உயிர்களை உயர்வாக்கும்
மந்திரமென உலகிற்கு
உரக்கச் சொன்னவள்
அயல் தேசத்து
கன்னியிவள்
நம்தேசத்தில்
கன்னியாஸ்திரியாக
வாழ்ந்தவள்..
பாரத தேசத்தின்
நோயாளிகள்
அனாதைகளென
ஒதுங்கியவர்களை
ஆதரவுக்கரம் நீட்டி
அரவணைக்க
மீட்டெடுக்க
தம் வாழ்வை
அர்ப்பணித்தவள்
நம் மண்ணிற்குள்
உரமானவள்..
அன்பு உள்ளத்தால்
அன்னையென
வணங்கப்பட்டவள்
உலகெலாம்
உயரிய பலவிருதால்
அலங்கரிக்கப்பட்டவள்..
இன்று இவள்
பிறந்த நாளில்
பெண்ணினத்தை
மதிக்கும்
சமஉரிமை நாளும்
கொண்டாடும்
பெருமை கொள்கிறது
இவ்வுலகெங்கும்...
நாமும் அவளை
நம்மின.. மகானாய்
நினைவில் வைத்து
அவள் வாழ்வின்
படிப்பினை எடுத்து
அன்புக்கரம் கோர்த்து
மதம் மறந்து
வணங்குவோம்
மதர் தெரேசாவை...🙏
* *



