அவன் இவனென
அன்புடன்
ஆதிக்காலம் முதல்
ஆயுட்காலம் வரை
அனைவரும்
உச்சரிக்குமோர் மந்திரம்
ஆண் எனும்
கனவுலக தந்திரன்
ஆம்... இவன்
ஆழ்மனமுள்ள எந்திரன்...
ஆ.............ண்
நெடில் என்பதால்தான்
அவன் நெஞ்சுரம்
நிறைந்தவன் ஆகிறானோ...!
உள்ளக் குமுறலை
ஊர் அறியாமல்
உள்ளுக்குள் அழுகிறானோ..!
ஆண்(பால்) தரும் மயக்கம்
பல போதைக்கும்
அடிமையாகிறானோ.!
பெருமையாக
எல்லோர் சுமையும்
முரண்பாடுள்ள
பெயர்களையும்
சுகமாக சுமக்கிறான்..
பல நேரம்
பெற்றதுக்கும்
பெற்றவருக்கும்
தாயாகிறான்...
மெழுகுச் சிலையாய்
ஒளிரும் பெண்ணுக்குள்
எரியும் திரியாகிறான்...
முடியும் வரை
முடியாது எனும்
வார்த்தையை
முறியடிக்கவே
முடிவு காலம்வரை
போராடுகிறான்...
படைப்பாற்றல்
உள்ளதால்தான்
முதல் ஈரெழுத்தை
சேர்த்துக் கொண்டானோ..?
நமை படைத்த
ஆண்........டவன்..
No comments:
Post a Comment