மலரினும் மென்மை
மெல்லினத் தேவதைகள்
வல்லூறுகளின்
வல்லுறவுகளால்
சிதறும் காகிதங்களாய்
மாறும் அவலங்கள்
வேரறுக்க... தூர்வார
போர் தொடுக்க
கை கோருங்கள்..
கடவுளாய் சுமக்கும்
தங்கத் தேர்களின்
களங்கச் சக்கரங்களை
கழற்றி எரியுங்கள்
அன்பான ஆணினமே...
இரண்டு கைகள்
இணைந்த உறுதி
எழுப்பும் ஓசையே
இவ்வுலகம் உந்தும்
விசையாகும்...
புன்னகைப் பூக்களால்
இன்பமி ரட்டிப்பாக
துன்பத்தை துவைக்கவே
ஓடுகிறோம் நாங்கள்
அழகு நதிகளாய்...
ஆர்ப்பரிக்கும்
கடல் சுனாமியாக..
பேய்.. பிசாசுகளாக
பூலோக காளியாக..
மாறும் நிலைக்கு
தள்ளி விடாதே
அதிகார வர்க்கமே
இருகரம் கூப்பி
வணங்குகிறோம்
நாங்கள்...
* * *
அனைத்துலக
பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாள்.. இன்று
இதுபோன்ற நாள் இனி தேவையில்லையென ஆதரவுக்கரம் நீட்டி.. சிந்தித்து செயல்படுவோம்
No comments:
Post a Comment