Saturday, 27 January 2024

விதையே.. நீ உறங்குகிறாயா..?


நெல் விதையே.. 

நீ உறங்குகிறாயா..? 

முடியவில்லை

விதைத்தவன் என்னால்...


நன்றாக வளர்ப்பேனா...

செழித்து சிரிக்கும்

உன் முகத்தை பார்ப்பேனா...


பல உயிர்களின்

வயிற்றை வாடாது

காக்கத் துடிக்கும் உன்னை

வாடாமல் காப்பேனா..


வேதியியல் கழிவுகளகற்றி 

இயற்கை காற்றை

சுவாசிக்க விடுவேனா..


மனிதக் கேடுகள்

ஏற்றும் நோயண்டாது 

உனை அணைப்பேனா..


குடைந்த கேள்விகள்

நிறைந்த மனதால்

உறங்க முடியவில்லை..


கண்ணீர்த் துளிகளால்

நனைக்க மாட்டேன் 

கவலையின்றி எழுந்து வா..

நடுங்கும் உனக்கு

ஊட்டச் சத்தாயிருப்பேன்

பூமிப்பந்தின் பசுமைக்கு

உயிர் கொடுக்கும்

உன் குடுமபத்தை

கட்டிக் காக்கும்

போராளி ஆவேன்.. 


என்னுயிர் போனாலும் 

உன்னுயிரை

வளர்த்தெடுப்பேன்

இறுதிமூச்சு விடும்வரை...

*** ***

(ஓடாய் தேயும் உழவனுக்கு சமர்ப்பணம் )

No comments:

Post a Comment