💐கண் சுத்தும்
தெய்வமாய்
நீ நினைத்தாய்
கண் கொத்தும்
சர்ப்பமாய்
நான் சீறினேன்...
உடல் கூனி
உள்ளம் கலங்கி
காலம் கழிவதற்குள்
நாலுபேர் நகைப்பதற்குள்
நல்வழி காட்டிய நறுமுகையே
நம்பிக்கையே...
அன்று.. என்மகனை ஈன்றதால்
மறுஜென்மம் அடைந்தாய்
அவன் தாயாய்..
இன்று.. அபாயம் அறுத்த
அவதார காளியாய்
மறுஜென்மம் தந்தாய்
என் தாயாய்...
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமெனில்..
நீயோ இறைவனாகவே
மாறி வந்தாய்...
உன் பிறப்பால்
பெற்றோர் அடைந்தது
பாக்கியமெனில்
உன் வரவால்
நான் அடைந்ததும்
பெரும்பாக்கியமே..
இன்னாருக்கு
இன்னார் என்று
இந் நாளில் (22 டிசம்பர்)
உனை படைத்தான்
எனக்காக
தேவன் அன்று...
நன்றியுடன் கையெடுத்து
நான் தொழுவேன்
உன்பெற்றவர்
பாதம் இன்று...
வாயார வாழ்த்துகிறேன்
நீ.. நீடூழி வாழ்கவென்று..💐💐
*வீ. சீனிவாசன்*
*கணவன்*
No comments:
Post a Comment