மீனைக் கவ்வும்
கொக்கு போல்
காத்து கிடக்குது
ஓர் கூட்டம்..
ஆழ யோசித்து
ஆழக் குழியில் தள்ள
காத்து கிடக்குது
ஓர் ஆணவக் கூட்டம்..
தந்திரங்களில்
வஞ்சனை செய்ய
காத்து கிடக்குது
நரிகள் கூட்டம்..
உழைக்கும் வர்க்கமே...
ஓடாய் தேய்ந்தது போதும்
புதுமை படைக்கும்
இளைய சமூகமே
நாகரிக மோகத்தில்
குனிந்து கிடந்தது போதும் ..
பலியாடுகளாய்
முந்தைய ஆட்களின்
மந்தை ஆடுகளாய்
இதுவரை
இருந்தது போதும்..
மான மில்லாமல்
மாற்ற மில்லாமல்
நாற்றம் வீசிய
ஆண்டாண்டாய்
மண்டியிட்டட
மாண்புமிகு மந்திரிகளை
தூக்கியெறியும்
மகத்தான எந்திரமே
உன் கைவிரல்....
இன்றாவது
உனக்குள் இருக்கும்
நெற்றிக்கண் திறக்கட்டும்
அருகதையுள்ள
அரசியல் பண்பாளனை
தேர்ந்தெடுக்கட்டும்
உரிமைக்குரல் ஓங்க
நிலம் செழிக்க
உன் ஆள்காட்டி விரல்
அடையட்டும்
வாக்களித்த பெருமிதம் ...
*** ***

No comments:
Post a Comment