வெள்ளையனை எதிர்த்த வீராதிவீரன்..
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆதிதேவன் அவதாரம்
பரமசிவன் ..
ஆன்மீகம் பழுத்த அப்பர்
சுதந்திர போராட்டத்
தியாகி வ.உ.சி
பாட்டுத் தலைவன் பாரதியென
மண்ணின் வரலாற்றை
இனத்தின் பண்பாட்டை
கண்டிராத இளைய தலைமுறைக்கு
காண்பித்து.. கற்பித்தவன்...
அண்ணனா... நண்பனா
கண்ணனா.. கணவனா..
ஏமாளியா.. கோமாளியா..
கள்வனா.. காதலனா..
இருப்பதும் ஓர்நிலையே
அதுபோல் வாழ்வதும் ஓர்கலையேயென
உறவுகளின் உன்னதத்தை
உணர்த்தியவன்
நான் அசைந்தால அசையும்
அகிலமிங்கேயென
அனைவரையும்
ஆயுளுள்ளவரை ஆட்டுவித்தவன்...
கொழுத்த செல்வந்தன்
பரம சாது ஏழை
ஊனமுற்ற ஊமையென
குரலால்.. பாவனையால்
நடிப்பின் நூலகமானவன்
அவன் வாயுச்சரித்த வசனவரிகள்
தமிழினம் மறவா முகவரி...
நம்முள்ளம் கவர்ந்த
உலகம் வியந்த
சூரக்கோட்டை தந்த தமிழன்
சிவாஜி கணேசன் என்னும்
சிம்மக் குரலோன்...
பேரைச் சொன்னாலே
ச்சும்மா... அதிரும்
அகில உலகமும்..🙏
* *

No comments:
Post a Comment