எம்மதத்தில்
எவ்வினத்தில் பிறந்தாய்
என்பதல்ல பெருமை
எத்தனை காலம்
எத்தனை பேர்
மனதில் வாழ்ந்தாய்
என்பதே பெருமை...
மூன்றெழுத்தில்
மூச்சுண்டு
மும்மத கடவுளுமுண்டு
மனிதமுண்டு மாண்புமுண்டு..
பிறர்நலமே தன்னலமென
வாழ்ந்த மனிதன்
இம்மண்ணில் இன்னும்
இருந்திருக்கலாம்
நனவான கனவுகள்
செழித்தபின்
மறைந்திருக்கலாம்
என்று நினைக்கலாம்
எனில்..
மாணவ மனங்களில்
எக்காலமும் மணக்கும்
அப்துல் கலாம்
பெயரொன்றே உச்சரிக்கலாம்...
"நமக்கும் ஓர்பக்கம்
வரலாற்றில் இருக்கட்டும்
வனம்வளர இனம் வளரும்
சிறுவுயிரும் உறவாகுமென"
அவர் பதிவை
பசுமரத் தாணியாய்
மனதின் கனவுகள்
மண்ணின் விதைகளாகட்டும்..
* *
அவுல்பகிர் ஜைனுல்லாப்தின் அப்துல் கலாம்
APJ Abdul Kalam.
Missile Man of India
பிறந்த நாள் இன்று அவரை நினைவுகூர்வோம்.
.🙏

No comments:
Post a Comment