ஆணிவேர் ஆழமானதால்
ஆலமரம்கூட
ஆண்டாண்டு காலம்
அழியாது நிற்கிறது
மனித இனம் தாங்குவது
மூதோர் எனும் வேர்களே...
அவ்வப்போது
ஆசிரியரைக் கண்டால்..
நமை அறியாமல்
பாதம் பணிவோம்
ஏனோ.. மனம்
ஏற்றிவைத்த ஏணியை
நமை ஈன்றவர்
நம் முதியோரை
வணங்க வருவதில்லை..
எல்லா வாய்களும் ஓர்நாள்
பொக்கை வாய்களாகும்
அதில்வரும் சிரிப்பும் அழகே..
அவ்வழகை தரும் ஆனந்தம்
நாமும் தரமறவோம்..🙏
* * *
தங்கம். வீகோசீ
புதுதில்லி
சி.கு: என்றாவது தாய்தந்தை அல்லது தாத்தா பாட்டியின் அருகே அமர்ந்து கைவிரல் அல்லது கால்விரலின் அழுக்ககற்றி நகம் வெட்டி இருக்கிறீர்களா..
நான் செய்திருக்கிறேன்
என் பாட்டிக்கு. . தவறாக சிறிது இரத்தம் வந்த வலியின் வேதனைகூட தெறியாமல் அவ்வளவு ஆனந்தமாக சிரித்தது😀

No comments:
Post a Comment