காக்கும் ஆண்டவராம்
விஷ்ணுவின் மறு
பிறவியானவராம்
தசரதன் பெற்றவராம்
அயோத்தியில்
பிறந்தவராம்...
ஓர்சொல்.. ஓர்வில்
ஓர்இல் கொண்டவராம்
தெய்வ பிராட்டி
சீதையை மணந்தவராம்...
அதிபலசாலி அனுமன்
அவர் பக்தராம்
ஜெய் ஸ்ரீராமென
நெஞ்சை பிளந்தவராம்
இலங்கையை எரித்தவராம்..
அநீதியை
அழித்தவராம்
நீதியை நாட்டியவராம்..
தேசத் தந்தை
வணங்கியவராம்
உயிர் பிரியுமுன்
ஹேராமென
துடித்தவராம்...
ராம்.. ராமென வணங்கும்
உயிர்கள் துன்பமகல
அருள்புரிந்தவராம்
அகிலத்தை காத்தவராம்...
அல்ல 108முறை
வாழும் வரை
தனை மறந்தே
ராம்.. ஜெயம்
தாய் மொழியில்
சொல்பவராம்
ஆத்திகன்..நாத்திகன்
கலந்த தமிழராம்
நாம் எல்லாம்
கம்ப ராமாயணம்
படித்தவராம்...
தமிழ் கடவுள்(முருகன்)
தாய்மாமன் முறையாம்
திருமாலின் அவதாரம்
ஜெய்.. ஸ்ரீ..ரா..ம்🙏

No comments:
Post a Comment