💐 *தை..தை..யென*
*தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*
*தை* மகள்
தமிழச்சிகளின்
ஒய்யாரமாய் ஒதுங்கிய
ஓரக்கண்கள்
கனலாய்.. காதலாய்
ஒளிவீசி உசுப்பிட.
திரண்ட தோளோடு
துடிக்கும் விடலைகள்
துள்ளி விளையாட..
கொழுத்த பிடறியாய்
திமிரும் எருதுகள்
எள்ளி நகையாட..
ஆடுகளத்தில் அதிரடியாய்
அதகளம் செய்யும்
ஜல்லிக்கட்டு..
அழியாத சுவடாய்
வீரச் சின்னமாய்
ஆழமாய் பதிந்த
விழுப்புண் தழும்புடன்
வீரத்தமிழன் செய்த
போர் விளையாட்டின்
நுழைவுச் சீட்டு...
கறுப்புக் கரும்பு
மஞ்சள்.. கிழங்கு
அனைத்த
மண்பானை வயிற்றில்
வெள்ளை பச்சரிசி
பாசிப் பருப்புடன்
வெல்லம் அணைக்க
பாலிட்டு.. கொஞ்சி
கொதிக்க விட்டு
*பொங்கலோ.. பொங்கலென*
குடும்பமாய்.. கூட்டமாய்
குதூகல கூச்சலிட்டு
சூரியனை வணங்கி
மாட்டன்னையின்
நெற்றியில்
சிவப்புத் திலகமிட்டு
வாழவைத்த
பூமியை முத்தமிட்டு
வாழ்வளிக்கும்
உழவனை உயர்வாக்கி..
உலகெங்கும்
உரக்கச் சொல்லும் ஓர்விழா..
*பொங்கல்..* எனும்
தமிழர் திருவிழா
தைத் திருநாள்...
*தை..தை..யென*
*ஜதிகள் அதிரிட*
கொண்டாடு தமிழா..
உனதருமை பெருமை
அண்ணாந்து பார்க்கும்
உலகம் என்றும்
உன்னோடு.. தமிழா...🙏
***
No comments:
Post a Comment