Sunday, 14 April 2024

*சித்திரைப் பெண்ணே முத்திரை..*


நித்திரையில் இருந்து

சித்திரையில் எழுந்து 

சிரிக்கும் புன்னகையே 

உன் முத்திரை...


பத்தரைமாத்து தங்கங்களே

தமிழின சிங்கங்களே

வாழ்த்துமழை கூறி

அன்பால் இணை..

மனதிலகற்று வினை

சிறக்கட்டும் மனை

விழியாகட்டும்

மொழியின் துணை

அதுவே நிறுத்தும்

புகழ்ஏணியில் உனை...

*** *** ***

மணபானை நீர்

பனைநுங்கு பதநீர்

பழையகஞ்சி நீர்

இளநீர்.. மோர்..

பொங்கவெச்ச சோறு... 

தலைவாழை விருந்து..


சோளக்கம்பு கூழ்

ராகிக் களி..

கருப்பட்டி வெல்லம்

எள்ளுமிட்டாய்.. 

கல்ல(கடலை)மிட்டாய்

பருப்புவடை, மாவிளக்கு.. 

அரிசிமுறுக்கு.. அதிரசம்

கொள்ளு/ வேப்பம்பூ ரசம் 

சிறுதானிய திண்பண்டங்கள்.. 


பல்லாங்குழி, சடுகுடு

கில்லி, கண்ணாமூச்சி,

சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,

கரகாட்டம், பறையாட்டம்..

இவையெல்லாம்

ஞாபகம் வந்தால்

மீண்டும்..

திண்ணுப் பார்..

விளையாடிப் பார்..

மனமெனும் 

தமிழ்வேர்களுக்கு

பாய்ந்த நீராய்

இன்பம் பொங்கும் ஊற்றாய்...

*** ***

(படிக்கும்போதே.. உங்கள் கண்கள் விரியும் குதூகலமாய் இல்லையா... முக்கியமாக அப்பன் முருகனை கும்பிட மறவாதே. 

தை / சித்திரை மாதம் இரண்டு முறை புதுவருடம் கொண்டாடும் தமிழினம்னு கூட சொல்லாம்)
 

No comments:

Post a Comment