நித்திரையில் இருந்து
சித்திரையில் எழுந்து
சிரிக்கும் புன்னகையே
உன் முத்திரை...
பத்தரைமாத்து தங்கங்களே
தமிழின சிங்கங்களே
வாழ்த்துமழை கூறி
அன்பால் இணை..
மனதிலகற்று வினை
சிறக்கட்டும் மனை
விழியாகட்டும்
மொழியின் துணை
அதுவே நிறுத்தும்
புகழ்ஏணியில் உனை...
*** *** ***
மணபானை நீர்
பனைநுங்கு பதநீர்
பழையகஞ்சி நீர்
இளநீர்.. மோர்..
பொங்கவெச்ச சோறு...
தலைவாழை விருந்து..
சோளக்கம்பு கூழ்
ராகிக் களி..
கருப்பட்டி வெல்லம்
எள்ளுமிட்டாய்..
கல்ல(கடலை)மிட்டாய்
பருப்புவடை, மாவிளக்கு..
அரிசிமுறுக்கு.. அதிரசம்
கொள்ளு/ வேப்பம்பூ ரசம்
சிறுதானிய திண்பண்டங்கள்..
பல்லாங்குழி, சடுகுடு
கில்லி, கண்ணாமூச்சி,
சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,
கரகாட்டம், பறையாட்டம்..
இவையெல்லாம்
ஞாபகம் வந்தால்
மீண்டும்..
திண்ணுப் பார்..
விளையாடிப் பார்..
மனமெனும்
தமிழ்வேர்களுக்கு
பாய்ந்த நீராய்
இன்பம் பொங்கும் ஊற்றாய்...
*** ***
(படிக்கும்போதே.. உங்கள் கண்கள் விரியும் குதூகலமாய் இல்லையா... முக்கியமாக அப்பன் முருகனை கும்பிட மறவாதே.
தை / சித்திரை மாதம் இரண்டு முறை புதுவருடம் கொண்டாடும் தமிழினம்னு கூட சொல்லாம்)

No comments:
Post a Comment