Friday, 4 August 2023

ஏழைகளின் ஆப்பிள்..💐

Happy Bloggers Day

ஏழைகளின் ஆப்பிளாக

பூத்துக் குலுங்கி

ரசித்து.. ருசித்த

தக்காளி.. இன்று 

தங்கம் நிகராக..

அடுத்தது

ஆகாச விலையில்

அரிசியும்தான்...

 

அன்னமிட்ட  கைகளில் 

கிண்ணம் திணித்து

பச்சைக் காடழித்து 

பிச்சைப்பணம் வளர்த்த

வானுயர வீடுகளானால்..

அலங்கார அடுப்பில் 

பூனை படுத்துறங்கும்

நம் பிள்ளை 

வயிறு சுருங்கும்...


இன்றைய 
அவலநிலையை தோலுரித்து

தொப்பையை தொங்கவிட்டு

நிமிர்ந்த தலைகளை

நாக்கடிமையால் குனியச்செய்த 

நகர வாசிகளே...

 

 வரகும்.. கேழ்வரகும்

தினையும்.. பனையும்..  

எள்ளுருண்டை கடித்தவர் 

இடித் துரைக்கவும் 

இன்னுமது அழியவில்லை 

இதை யுண்டவர் 

நோயண்டி வீழ்வதில்லை... 


வாழும் கலையும்

வழித்து உண்ட 

வாழை இலையும் மறவாதே.. 

உழவன் ஒதுங்கினால்

உலக வாழ்வு சிறக்காதே...


தரணி போற்றும்

இனிய இனமே..

இனியாவது விழித்திடு

வளமான சமூகம்

நிலைத்திட..செழித்திட ..

வழியுண் டெனத்தேடு

தமிழன் என்றோர்  

இனத்திற்கேது யீடென
எழுதட்டும் ஏடு...

* * *💐

No comments:

Post a Comment