Saturday, 19 August 2023

உலக மனிதநேய தினம்


நேயம் இல்லாத

மனிதம் உண்டா..?


மனிதா..

எது இல்லையோ

எது தேவையோ

அதைத்..தா  

அல்லது

தருவித்து தா...


அளவில்லாத செல்வம்

அளந்து தராவிடினும்

அன்பெனும் ஆடையை

நேசக் கரங்களால் தை..

கூடிவாழும் முறை 

உண்டென்பதை

மனதில் விதை...


நீ 

மனிதனா..மாமனிதனா

மன்னனா..மாமன்னனா..?

உன் விழி மூடுகையில்

வழியைக் காணாத

வலியால் துடிக்கும்

விழிகளே சொல்லட்டும்..


இவரைப்போல

மண்ணாசை 

மனயாசையில்லா

மனிதநேயன்

மீண்டும் பிறக்கட்டும்...


கண்ணனோ.. கள்வனோ 

அல்ல கேள்வி

கருணை யுள்ளவனா

எனக் கேள்..

உனதருகே வாழும்

உயிர்களுக்கும்

மண்ணுக்கும்

எதைத் தருகிறாய்

என்பதைக் கேள்...


இன்று மனிதநேயம்

கொண்டாடும் நாள்

அதற்கு தகுதியுள்ளவனா 

உனக்குள் கேள்...

*** ***

No comments:

Post a Comment