வாய் பிளந்தால் ஆத்தாடி...
காற்றில் பறந்தால் காத்தாடி...
கூழ் ஊற்றினால் அம்மன்ஆடி
அவளை வணங்கும்
பாடல்தேடி ஆடிப்பாடி
கூடி ஆடினால் கூத்தாடி..
தள்ளுபடியில் மனம் அள்ள
வைத்தது ஓடியோடி...
புதுமணத் தம்பதியை
தள்ளிவைக்கும் தலையாடி ...
எம்மாடி.. இதெல்லாம் ஏனிப்படியென
காணும் நம் முகம்வாடி
சுத்த வைக்குது தலையாடி...
அனைத்தும் இனிதே முடிந்தது
இம்மாதம் ஆடி...🪷🪷
*** ***
No comments:
Post a Comment