பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)
குன்று தோறும் நின்றாடி
குலம் காத்த ஆறுமுகக்குமரா..
உன்றன் அருளாசியோடு
இன்றுதித்த என்றன் குமரனை...
திருக்குறள் திருப்புகழ் திருமுறை
தேவாரம் திருவாசகம் தேன்தமிழ்
நூல்யாவும் என்றும் மறவாது ஓதி...
கற்றவர் போற்றிட மற்றவர் கற்றிட
செல்லுமிடம் யாவும்
நின்று முயன்று வென்றிட..
தமிழனாய் பிறப்பதற்கோர்
தவமிருத்தல் வேண்டுமென
இறைவன் பாதம்பணிந்து
வேர்மறவா தளிராய்.. தாய்மொழி போல்
சிறப்புற்று வாழ்ந்திட
காத்தருள்வாயென வேண்டுகிறோம்...
எந்நாளும் போலவே... இந்நாளும் இல்லையென
நமக்கடுத்த தலைமுறை.. தழைத்து விட்டதென
சற்றே.. ஆனந்தமாகிறது தாய்தந்தை மனமின்று,..

No comments:
Post a Comment