வறண்ட தோல்
வாடிய முகம்
ஒட்டிய வயிறு
ஒடிசல் தேகம்
உலர்ந்த வாய்
உடைந்த மனம்
மண்ணை தொட்டு
வாழும் உழவன்
நிலையும் இதுவே..
மண்ணில் வீழாது
விண்ணிலேறி
வாகை சூட
வழியேற்றும் தந்தை
நிலையும் இதுவே..
எல்லாம் பெற்று
எகத்தாளமாய் வாழ்பவனும்
ஏய்த்து வாழ்பவனும்
ஒற்றை நாடியில்
கடைக்கோடி நிற்கும்
நிலையும் இதுவே..
எதையும் எனதாக்கும்
எவனும் ஒன்றுமில்லா
நிலையும் இதுவே..
ஆதலால்..
ஆடி அடங்கும்வரை
அடக்கமாய் வாழ்வீர்..
கர்மவினைகளுள் சுழன்று
இன்னுயிர் உழன்று
கரைவதற்குள்
நேசக்கரம் ஊன்றிய
விதைகளாய்
மண்ணிற்குள் உரமாவோம்
நம்பேர் மணம்
வீசும் மரமாவோம்...
* * *

No comments:
Post a Comment