Tuesday, 5 September 2023

இருளைப் போக்கும் அருளாளர்களை வணங்குவோம்

                                           


 மூச்சை வளர்த்தது கருவறை

பேச்சை வளர்த்தது வகுப்பறை..

நேயம் வளர்த்தது திருமுறை

நற்பண்பை வளர்த்தது படிப்பறை,.

உயிர்காப்பவன் ஈசன்

உயர்வாக்குபவன் ஆசான்...


ஊதாரி உள்ளமும்

மதியா திமிரும்

உள்ளேன் ஐயா..யென

மண்டியிட்ட ஆடாகும்

ஆசானைக் கண்டால்..

நீரின்றி அமையாது

உலகெனின்

நீயின்றியும் அமையாது நல்வுலகு... 


கருவறை கடவுளை வணங்கினால்

மனம் பண்படும்

வகுப்பறை ஆசிரியரை வணங்கினால்

வாழ்வு வளம்பெரும்


கற்காலமோ

கணிணி காலமோ

எக்காலமும்

இருளைப் போக்கும்

அருளாளர் ஆசிரியர்கள்..


மாணவர்களே..

உறங்கும் உன்மதியை 

உணர்வால் மிதித்து

செயலால் செதுக்கி

மானமுள்ள மனிதனாய்

மாண்புமிகு தலைவராய்

முகவரி கொடுப்பவர்

ஆசிரிய ரெனும்

மாணிக்கங்களே..

அரண்மனை காக்கும்

மதில் போல்

ஆசிரியரைக் காக்கும்

காவலனாவோம்...


ஓர்பிறவி தந்த

பெற்றோரைப்போல்

மறுபிறவி தரும்

ஆசிரியர்களின்

பாதம் பணிய 

மறவோம் என்றும்...

* * *

அனைவருக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.💐

No comments:

Post a Comment