பேச்சும் மூச்சும்
மனிதனின் பிரதானம்
அண்ணாவின் இவை
அனைத்தும்
தமிழனுக்கே தானம்.
பேச்சும் மூச்சும் கீதம்
அண்ணாவின் இந்நாதம்
ஆர்ப்பரித்த நம்
இனமடக்கிய தாகம்..
சிலநேரப் பேச்சுக்களே
பலநேர வரலாற்றுக்கள்
பேச்சுக்கலை- அது
பறிக்ணும் களை
வளர்க்கணும்
பலர் மூச்சுகளை...
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு மூன்றும்
மூன்றெழுத்து முத்தாய்
தமிழின வித்தாய்
*அண்ணா* உதித்த
மனிதன் சொத்தாய்
காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கிறதென
மறவோம் இன்று...
ஆகச் சிறந்த
பேச்சாளர் அண்ணா -அவரால்
எவரும் பெற்றிலர் இன்னா
முயன்றால் அவன் போலாகும்
எந்நாளும் உன் நா..💐💐
*** *** **

No comments:
Post a Comment