எதிர்பாராமல்
எதிர்வினையால்
எதிர்கொள்ளும்
ஏச்சுக்கள் பேச்சுக்கள்
ஏராளம் இவ்வுலகில்...
ஆரவாரமில்லா
அதிசயங்கள்
ஆச்சர்யங்கள்
அதிர்ச்சிகள் நிகழ்வுகள்
குழப்புகிறது மனதில்..
ஆடல் பாடல்கள்
கேளிக்கைகள்
ஆட்கொள்வதும்
கலவரங்களால்
ஒடுங்குவதும்
ஒடுக்குவதும்
வாடிக்கை இங்கே..
நிமிடங்கள் யாவும்
நிரந்திரமின்றி ஓடுகிறது
முதுமை இளமையை முந்துகிறது
மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மணப்பதால்
பலியாடுகள் விழுந்த
பேராசைகுளம் நிரம்புகிறது..
நீ.. நானென ஒதுங்காமல்
நாமென இணைந்து
தோற்பதும் ஜெயிப்பதுமே
போராட்டம்
நன்மை நூறாயினும்
ஓர்தீமையால் ஒதுக்கிவிடும்
இம்மனித இனம்...
காய் நகர்த்தாமல்
காயப் படுத்தாமல்
கவசம் இடாமல்
நேர்கொண்ட பார்வையால்
கலங்காதுநில் மானிடா...
எது தேவையோ
அதுவே தர்மமாயின்
செய் தொழிலோடு
போர்த் தொழிலும்
பழகுவாய் மானிடா...
*. * *
கள்ளம் கபடமில்லா கதைகளால் வாழைப்பழத்தில் நுழைத்த ஊசிபோல் நம்மை நெறிபடுத்தி வளர்த்த தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் பெற்று அவரை வணங்குவோம் இன்று...
* * *

No comments:
Post a Comment