🪷🌹🎂முழுமதி.. முகமால்
மீன் விழியால்
தத்தை மொழியால்
வித்தை செய்தவளே...
நித்தம்.. நித்தம்
என்சித்தம் சிதற
சிரம் தாழ்ந்து
கரம் கோர்த்தவளே..
வாழ்வெனும் வசந்தத்தில்
ஓர்தவப் புதல்வனை
பரிசாய் தந்தவளே...
உள்ளம் உவந்து
விருந்தோம்பல் புரிவதே
கடமை யெனும்
பெற்றவரை பெற்றவளே..
அன்பு.. அழகு
ஆளுமை.. கருணை
பொருள் பொதிந்த
*அனிதா*எனும் பெயர் கொண்டவளே..
உன்சொல்லால் செயலால்
உனைநாடும் மனிதர்
துடுப்புகண்ட ஓடம்போல்
ஒடிந்த மனமாறி
துடிந்த நிலையேறி
நலமாகி.. வளம்காண
வாழ்த்துகிறேன்..
22-12-2023.. இன்று
பிறந்தநாள் காணும்நீ
ஆண்டவன் அருளால்
நீடூழிவாழ வாழ்த்துகிறேன்...💐
*** *** ***
*வீ. சீனிவாசன்*
(உன்இணை சேர்ந்து வாகை சூடும் கணவன் )
No comments:
Post a Comment