Sunday, 24 December 2023

பா...வுக்கே இலக்கணமான சுபா...



 பா க்களால் 

பாரதப் பிள்ளைகளை

தாலாட்டியவர்

பரங்கியரை அதிரவைத்தவர்...


எழுத்தாணியால்

செதுக்கிய எழுத்துக்களால்..

ஏனென்ற கேள்விகளால்..

ஏவுகணை செய்தவர்...


ஆறாத சினத்தால்

தீயவரை துளைத்துவிடு தோழாயென

புதுமைப் பெண்களின்

மனதில் விதையானவர்..


படைத்தவனை

ஆராதிக்கும இனத்தில் உதித்தாலும் 

ஆகாதென தள்ளிவைத்தவனை

அணைத்து முண்டாசுகட்டி

மீசை முறுக்கியவர்...


பாரெங்கும் பரதேசியாய்

பழ மொழியை நுகரந்தபின்

தாய்மண் தமிழ்மொழியை

நாடி நரம்புகளில்

சுவாசித்தவர்...


உலகம் வியந்த

மொழி பிறந்த

எம் மண்ணிற்கும்

எம் பாட்டுக்கும் 

தானே தந்தையென

தேசத் தந்தைமுன்

தலைக்கனம் காட்டியவர்...


காக்கை குருவிகளும்

நம் இனமே

காணி நிலமானாலும் 

அதற்கும் பங்குண்டென

தலையில் தட்டியவர்...


செல்வம்பின் செல்லாது

செல்வந்தர்பின் நில்லாது

செல்லம்மா.. செல்லம்மாயென

சொல்லிக்கொண்டே 

இருந்துவிட்டார் இறக்கும்வரை...


இந்திய மண்ணில்

இவனைப்போல்

இனியொருவன்

இனிமேல் இல்லையென

எண்ணியவர்..ஏசியவர்..

அழுதவர்.. ஆகாதவர்

அனைவர் மனதிலும்

சிம்மாசனமிட்டு

இறக்கும்வரை 

இருந்துவிட்டார்..


யார்.. யாரென

யாரும் கேட்காமல்

யாவரும் நலமடையவே

பா.... வுக்கே இலக்கணமான

பா.. என்னும் சுபா...🙏

* *


இன்று பாரதியார் பிறந்தநாளில் அவரைத் தொழவேண்டும்...  இல்லையெனில் தமிழனாய் அவரை நினைத்து பெருமைகொள்வோம்.. தமிழினமே...🙏

No comments:

Post a Comment