கறுப்பு வெள்ளை
கனவுகளை
வண்ணங்களால்
அலங்கரித்து
ஆராதனை செய்தவர்...
சிவப்புத் தோல்கள்
மின்னிய விளக்குகளில்
கறுப்புத் தோலை
மின்ன வைத்தவர்
பொறுப்புள்ள அண்ணனாய்
தம்பிகளின் முன்
பொன்னாய் ஜொலித்தவர்...
ஓசியாய் ஏமாற்றி
பாசாங்கு செய்தவர்முன்
பசி என்பதையழித்து
பாசத்திற்கு மறுபெயரானவர்...
நிழல் உலகில்
வேடம்தரித்த இவர்
நிஜ உலகில்
கபடதாரிகளை உரித்தவர்...
சொல்லால்.. செயலால்
பொன்மனச் செம்மலின்
உருவத்தில் வாழ்ந்த
கறுப்பு வைரம்...
அகிம்சை அழித்து
தேசப்பற்றை நெஞ்சிலேற்றி
கண்ணகளால் தீப்பொறி
பறக்க வைத்தவர்
நீதிக்குத் தண்டனையெனும்
அநீதியை அறுத்தெழ
ஒன்றுசேர் தோழாயென..
கனல் வார்த்தைகளால்
இளம் தலைமுறையை
கட்டி இழுத்தவர்
தன்மானத் தமிழனை
தட்டி எழுப்பியவர்...
ஆண்டாள் பெற்ற
இம் மைந்தன்
அன்புள்ளத்தால்
ஆண்டவன்..
எனும் பேறுடனே மறைந்து
மக்கள் மனதில் நிலைத்துவிட்டான்
என்றென்றும்...🙏

No comments:
Post a Comment