மாநிலம் பல
ஒன்றடங்கியது
எங்கள் தேசம்
இனங்கள் பல
ஒன்றிணைந்தது
எங்கள் நேசம்
இன்னலும் வலியும்
மரணம் கடந்தே பெற்ற
இச்சுதந்திர சுவாசம்
தந்த தியாகிகளே
நமது தலைக்கவசம்...
இன்றெமது கைகளில்
தவழ்வது ஓர்கொடி
தாயின் மணிக்கொடி
என்னும் தேசியக்கொடி...
எம் மதமாயினும்
எம் மொழியாயினும்
இந்திய னென்னும்
பெயரே பெருமை..
நம் பேச்சும்..மூச்சும்..
சொல்லட்டும் அதனருமை
அதுவே யிருக்கட்டும்
தலையாய உரிமை
முடியும்வரை
நாட்டைக் காப்பதும்
கடமையென
உயிரான தாய்மொழியில்
உள்ளத்திலெடுப்போம் உறுமொழி...
ஊருமுறவும் துறந்து
எங்கோர்.. மூலையில்
எதையும் ஏங்காமல்
தாய்நாடே தன்னுயிராய்
காக்கும் காவலனை
வாழும் தியாகியை
வணங்குவோம்
குல தெய்வமாய்
தவிக்கும் அவனுறவை
நினைப்போம் நமதாய்..🙏
* * **

Super 👌
ReplyDelete