Monday, 25 March 2024

இனிய சிட்டுக்குருவி இனமே...*


 *இனிய சிட்டுக்குருவி இனமே...*

எங்கே.. சென்றாயோ

ஏங்கிய உள்ளத்தில்

இன்பத் தேன்சிட்டின்

சிணுங்கல் சீண்டியதால்

துள்ளி எழுந்தேன் 

கைகள் துளாவி

தேடிய கண்களுக்கு

பட்டதோ கும்மிருட்டு...

கனவில் கண்டேனோ..!


இலவம் பஞ்சாய்

தழுவிய பிஞ்சு

சிட்டுக் குருவியே

நலமாய் இருக்கிறாயா...


உன்பட்டு இறகைத்

தொட்டுவிட ஆசை...

காதலாய் உன்இணை

முத்தமிடும் ஓசை

கேட்க ஆசை...


முற்றத்து கூட்டில் 

லூட்டி அடிக்கும் 

உன் *கீச்கீச்* ஜதிக்கு

ஏங்குகிறது மனம்தாளமிட..


பாசமாய் பாடித்திரிந்து

பசும் வயலுக்குள் சுற்றி 

பானைக்குள் தாகம்

தீர்க்கும் எம்மினத்தை

பாந்தமாய் ரசித்தவன்..


இன்று.. பாழடித்து

மொட்டையடித்து

மாடிமேல் மாடிகட்டி 

வாழ்வாங்கு வாழும் 

மானிடனாய்.. மனம்மாறி 

ஓர்நொடியில் பொசுக்கும்

 நிலையாகிவிட்டானென

ஓடிவிட்டாயோ...

மீண்டும் வரும்வழி

மறந்துவிட்டாயோ...


அரசன் அன்று கொல்வான

தெய்வம் நின்று கொல்வான்

என்பது அக்காலம்..

ஒன்றுமறியா உன்

சிற்றினம் அழித்த பாவம்தானோ..

அடித்துக் கொள்கிறோம்

கடித்து கொள்கிறோமோ

இக்காலம்...


என் இனிய

சிட்டுக்குருவி இனமே

எமக்குள் அன்பெனும்

ஊற்று பெருக..

உன் அடிநாதக் குரலோடு

திரும்புவாயா...

***. *** ***

No comments:

Post a Comment