Monday, 25 March 2024

என் வாழ்க்கையென எழுந்து நில்...

 *என்னோட வாழ்க்கையென எழுந்து நில்..*


உள்மனம் ஆறாத

சொல்லால் சுடாதே,.

உன்மனம் மாறாத

செயலால் சுருங்காதே...


கால் கடுக்க

கடன் கேட்காதே...

காலம் கடந்து

கடமை செய்யாதே..


நற்செயல் நன்றியை

அன்றே கூறு...

தீயவை காண்கையில்

தீயாய் பொசுக்கு...


நமக்கான நாள்வரை

நாளை தள்ளாதே...

பிறக்கட்டும் 

புதிய நாளோடு

புது மனமும்...


நான்கு திக்கும் 

நன்கு கவனி

உனக்காக காத்திருக்கும்

ஏதோ ஓருயிர்...


குடும்பம் எனும் கூட்டை உடைக்காதே..

கட்டுவதும் ஒட்டுவதும் 

கடினம்...


என்னடா வாழ்க்கையென

சளிக்காதே

என்னோட வாழ்க்கையென

எழுந்து நில்...


படித்தவன் கைவிட்டால்

படைத்தவன் காப்பான்...


வியர்வைத் துளிகளால்

உன்மணம் கலக்கட்டும்

வீசும் காற்றில்...

தலை நிமிரும் ஓர்நாள்

வெற்றிக் களிப்பில்..

*** *** ***

No comments:

Post a Comment